இரவுகளை
உறங்கவிடாமல்
பிரகாசத்தை
தமிழில் செலுத்தி
என்னை
கவிதை எழுத வைத்தாய்...
தூங்க முடியாமல்
எத்தனையோ
இரவுகளை
இழந்திருகிறேன்...
முடியவில்லை
இழந்தவற்றை
கணக்கெடுக்க...
ஒவ்வொரு இரவுக்கும்
என் கவிதையின்
முத்தம்
இருக்கும்...
இவையனைத்தும்
என்
மதிப்பிற்குரிய காதலியான
"தமிழ்"க்காக
இழந்தவை...
ஒரு வழியாக
காதலித்தால் இரவுகளை
மறந்துவிடத்தான்
வேண்டுமென
"தமிழ்" மூலம்
கற்றுக் கொண்டேன் .
No comments:
Post a Comment